Wednesday, August 5, 2009

விகடன் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009 பாகம் 2

முதல் ஏழு ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன் காண http://idhyamonline.blogspot.com/2009/08/2009.html


விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படுபவர் நீங்கள். இதுவரை 10-ஆம் வீட்டில் நின்ற சனி பகவான், 26.09.2009 முதல் 21.12.2011 வரை லாப வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப் போகிறார்.

உங்களின் உழைப்புக்கு ஏற்ற வகையில், பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலைகளில் மன நிறைவு கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் வரும். குடும்ப வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் இறங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை மேம்படும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணிகள் முழுமையடையும். கணவன்- மனைவிக்கு இடையே சந்தேகங்கள் விலகும்; அந்நியோன்யம் அதிகரிக்கும்.

எப்போதும் கெட்ட செய்திகளும் கனவுகளும் வந்து உங்களை அலைக்கழித்து வந்த நிலை மாறும்; மங்களகரமான செய்திகள் தேடி வரும். காரியங்கள், முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும். சொத்து வாங்குவீர்கள். வி..பி-கள் அறிமுகமாவர். எனினும் சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் முன்கோபம், எரிச்சல் மற்றும் தலைசுற்றல் ஆகியன வந்து நீங்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

26.09.2009 முதல் 19.09.2010 வரை உங்களின் தசம ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் சனி பகவான் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். நாடாளுபவர்கள் உதவுவர். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புது வேலை அமையும். எனினும், 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். மறைமுக பகைகள் அதிகரிக்கும்.

உங்களின் பாக்கிய அதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில், 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. பிதுர் ராஜ்ய சொத்துகள் வந்து சேரும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பொன்- பொருள் சேரும். எனினும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால், தந்தையுடன் கருத்துமோதல், வீண் செலவுகள் வந்து நீங்கும்.

உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில், 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் அழகு- அறிவு கூடும். அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

உங்களது பூர்வபுண்ய ஸ்தானத்தை, சனி பார்ப்பதால் படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடலாம். அவர்களது நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். சகோதரியின் திருமணம் கோலாகலமாக நடந்தேறும். எதிரிகளும் நண்பராவர்.

ஆவணங்களில் கையெழுத்து இடும்போது கவனம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சொந்த ஊர் விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. லாகிரி வஸ்துகளைத் தவிர்க்கவும். நண்பர்கள்- உறவினர்களிடையே மரியாதை கூடும். அக்கம்பக்கத்தாரின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும்.

வியாபாரத்தில், கையை சுட்டுக் கொண்ட நிலை மாறும். கொடுக்கல்- வாங்கல் பிரச்னைகள் தீரும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வர். எலக்ட்ரிக்கல்ஸ், பெட்ரோ கெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில், புதியவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில், இழந்த சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள். உங்களது திறமைக்கேற்ப பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! விரைவில் கெட்டிமேளம் உண்டு. பணி நிரந்தரமாகும். மாணவர்களே! ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. மதிப்பெண் உயரும். கலைஞர்களே! உங்களை அலைக்கழித்த நிறுவனமே புதிய வாய்ப்புகளைக் கொடுக்கும். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவர். உங்கள் படைப்புகள் பெரிதும் பேசப்படும்.

பொதுவில் இந்த சனிப் பெயர்ச்சி, உங்களை தன்மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்

ன்மானத்துடன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்புபவர் நீங்கள். இதுவரை ராசிக்கு 9-வது வீட்டில் அமர்ந்து, உங்களின் சிந்தனை மற்றும் செயல்திறனை மழுங்கடித்த சனி பகவான் 26.09.2009 முதல் 21.12.2011 வரையில் 10-வது வீட்டுக்குள் அமர்ந்து நற்பலன்களை தரப்போகிறார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என வருந்திய நிலை மாறும். அனைத்து விஷயங்களிலும் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசி குறை நிறைகளை அலசி ஆராய்வீர்கள். குடும்பத்துக்குள் அமைதி திரும்பும். எதிரும் புதிருமாக எதிலும் இருந்த கணவன்- மனைவியிடையே பிணக்குகள் தீரும். தந்தையுடனான கருத்து மோதல்களும் அவருக்கான மருத்துவச் செலவுகளும் நீங்கி அவர் உடல்நிலை சீராகும். பிள்ளைகளின் கூடாப் பழக்கங்கள் விலகும். அவர்களின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

26.09.2009 முதல் 19.09.2010 வரை உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் சனி பகவான் செல்கிறார். இந்தக் கால கட்டத்தில் எதையும் சாதிப்பீர்கள். வீடு- வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எனினும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால், பொருள் இழப்பு, வழக்குகள் வந்து நீங்கும்.

உங்களின் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில், 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் திடீர் பயணங்கள், செலவுகள் வந்து போகும். எனினும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் எதிர்பாராத வெற்றி, பண வரவு, அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

உங்களின் பூர்வ புண்ய- விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில், 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் பிள்ளைகளுக்கு திருமணம் கூடி வரும். சொத்துகள் சேரும்.

சனி பகவான் 4-ஆம் வீட்டை பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்துகளை கவனமாகக் கையாளவும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை- ஆபரணங்களை வாங்குவீர்கள். எந்த வேலையையும் நீங்களே செய்வது நல்லது. புகழும், கௌரவமும் ஒரு படி நன்றாகவே உயரும். அதிகார பதவியில் இருப்பவர்களது நட்பு கிடைக்கும். ஆன்மிகம் மற்றும் தர்ம காரியங்களில் ஆர்வம் பிறக்கும்.

சனி 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கம் குறையும். சாதுக்கள், சன்னியாசிகளின் தொடர்பு கிடைக்கும். 7-ஆம் வீட்டை பார்ப்பதால் மனைவியின் உடல்நிலையில் பாதிப்பு நேரலாம்.

வியாபாரத்தில் கணிசமான லாபம் உண்டு. புதிய துறைகளில் கால் பதிப்பீர்கள். புதிய யுக்திகளால், போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள்; நிச்சயம் லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். கமிஷன், கன்சல்டன்ஸி மற்றும் உணவு வகைகளால் ஆதாயம் உண்டு.

சனி 10-ஆம் வீட்டில் நிற்பதால், உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் சில நேரங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் கவனமாகவே பழகுங்கள். மேலதிகாரியின் உதவி கிடைக்கும். அவர்கள் மூலம் முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு தாமதமாகக் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே, கூடாப் பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். தவறிய பாடத்தில் தேறி, புது வேலையில் சேர்வீர்கள். சர்ப்ப தோஷங்கள் நீங்கி கல்யாணம் முடியும். மாணவ- மாணவிகள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆசிரியரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைஞர்கள் மீதான வீண் பழிச் சொற்கள் நீங்கும்; புகழ் சேரும்.

பொதுவில் இந்த சனிப் பெயர்ச்சி, சோர்ந்து கிடந்த உங்களைத் தூக்கி நிறுத்துவதுடன், சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக அமையும்

தயத்தால் பேசும் நீங்கள், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர். இதுவரை அஷ்டமத்தில் நின்று, கஷ்டம் கொடுத்து உங்களை அலற வைத்த சனி பகவான் 26.09.2009 முதல் 21.12.2011 வரை 9-ஆம் வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார்.

அனைத்துக் கஷ்டங்களையும் மனதுக்குள் வைத்து மருகிய துன்ப நிலை இனி இல்லை. உள்ளுக்குள் புழுங்கித் தவித்த நிலையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களைப் பார்த்தாலே எழுந்து நின்று கை கட்டி மரியாதை செய்தவர்கள் எல்லாம் உங்கள் மீது கை ஓங்குமளவுக்குப் போனதே! அவர்களுக்கெல்லாம் இனி நீங்கள் பதிலடி தருவீர்கள்.

ஏமாற்றங்கள், இழப்புகள் இனி நேராது. கடன் பிரச்னை முடிவுக்கு வரும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வர். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீடு- மனை வாங்க வேண்டும் என்ற உங்களது விருப்பம் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில், 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் எதிலும் வெற்றி உண்டு. தடைப்பட்ட வேலைகள் முழுமை அடையும். வழக்குகள் சாதகமாகும்.

எனினும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் சிறு சிறு விபத்துகளும் மன உளைச்சல்களும் ஏற்படலாம்.

உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில், 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால், உங்களுக்குள் உறங்கிக் கிடந்த திறமைகள் வெளிப்படும். வாகன வசதிகள் வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். மனைவிக்குப் பிடித்த உயர்ரக ஆடை- ஆபரணங்கள் வாங்கித் தருவீர்கள். எனினும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் மனைவி வழியில் செலவுகளும் உடல்நலத் தொந்தரவுகளும் ஏற்படலாம்.

உங்களின் சுக- லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில், 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால், பெரிய பதவிகள் தேடி வரும். புது வீட்டுக்குக் குடி புகுவீர்கள்.

பாதை தடுமாறிச் சென்ற பிள்ளைகளை நினைத்து கவலைப்பட்டீர்களே! இனி உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு அவர்கள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்; திருமணமும் இனிதே நடந்தேறும். மகனின் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்துவீர்கள். நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியவில்லையே என்று நீங்கள் புலம்பிய காலம் மாறி, இனி மன நிம்மதி பிறக்கும்.

உங்களை அலைக்கழித்த முன்கோபம் நீங்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வர். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றியவர்களிடம் இருந்து பணம் வரும். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர்.

வியாபாரத்தில், உங்களின் தொலை நோக்கு சிந்தனையால் லாபம் கூடும். ஸ்டேஷனரி, ஹோட்டல், ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் வாகன வகைகளால் லாபம் உண்டு. அனுபவம் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதால் கடையை அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வர். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வேறொருவர் தட்டிச் சென்றாரே... இனி இந்த நிலை மாறும்.

கன்னிப் பெண்களே, உங்களை கலங்கப்படுத்திய சொந்தங்களுக்கு தக்க பதிலடி தருவீர்கள். மாதவிடாய்க் கோளாறு, ஒற்றைத் தலைவலி விலகும். உயர் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும்.

மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். கலைஞர்கள் பிரபலமாவார்கள்.

பொதுவில் இந்த சனிப் பெயர்ச்சி, அஸ்திவாரமாக அழுந்திக் கிடந்த உங்களை கோபுரமாக நிமிரச் செய்யும்


திர்மறை எண்ணம் கொண்டவரையும் நேர்வழியில் அழைத்துச் செல்பவர் நீங்கள். இதுவரை, உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் இருந்து, தோல்விகளையும், தனிமையையும் தந்த சனி பகவான் 26.09.2009 முதல் 21.12.2011 வரை அஷ்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார்.

'அஷ்டமத்துச் சனியா? இனி தினந்தோறும் அவஸ்தைதான்! அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி என்பார்களே! இனி வீண் பழி எல்லாம் வருமே' இப்படி எல்லாம் நீங்களாகவே எண்ணிக்கொண்டு மனம் கலங்க வேண்டாம். உங்கள் ராசி நாதனான சனி பகவான், நட்புக் கிரகமான புதனின் வீட்டில் அமர்வதாலும், அவ்வப்போது குருவின் பார்வையைப் பெற இருப்பதாலும் நல்லதே நடக்கும்.

தாழ்வு மனப்பான்மை, சேமிக்க முடியாமை, தொடர்ந்து நஷ்டங்கள்... இப்படியாக இருந்துவந்த நிலை இனி மாறும். உங்களை வாட்டி வதைத்த நெஞ்சு வலி, மூட்டு வலி, மற்றும் வயிற்று வலி ஆகியன நீங்கும். கணவன்-மனைவி இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு அன்புடன் நடந்து கொள்வீர்கள். மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். எனினும் ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில், 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் எதிர்ப்புகள் நீங்கும். நாடாள்பவர்களின் நட்பு கிடைக்கும். மனைவி வழி உறவினருடன் இருந்துவந்த மனக் கசப்புகள் நீங்கும். எனினும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்கிரத்தில் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் தந்தையுடன் கருத்துமோதல்களும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில், 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் வயிற்றுவலி, சைனஸ் தொந்தரவு மற்றும் கடன் பிரச்னைகள் ஏற்படலாம். எனினும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வழக்கில் வெற்றி, பண வரவு ஆகியவை உண்டு.

உங்களின் திருதிய- ஜீவனாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில், 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் விலகும். அவர்கள் இனி பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். நல்ல வேலை கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். புது வாகனம் வாங்குவீர்கள். வசதியான வீட்டில் குடி புகுவீர்கள். கடன் மூலம், சொந்த வீடு வாங்குவீர்கள்.

உங்களின் வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் மற்றவர்களை எதிரிடையாக விமர்சிக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர் சிலர் பணம் கேட்டு உங்களை நச்சரிப்பர். முக்கியமான பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். எனினும் எதற்கும் நன்கு யோசித்து முடிவு எடுக்கவும். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். வழக்குப் பிரச்னைகளில், வழக்கறிஞரின் ஆலோசனை இன்றி நீங்களாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தில், பண உதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவுப் பொருட்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில், நல்ல பெயர் கிடைக்கும். பதவி மற்றும் சம்பள உயர்வும் உண்டு.

கன்னிப் பெண்களே, சில தருணங்களில் கை-கால்கள் மரத்துப் போனதாக உணர்ந்தீர்களே... இனி, உடல் நிலை மேம்படும். உற்சாகம் தங்கும். கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். மாணவ-மாணவியருக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தெரியாததை, ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர்கள், சோகத்தில் இருந்து விடுபடுவர். புதிய வாய்ப்புகளால் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை உற்சாகப் படுத்தி உருவேற்றுவதாக அமையும்

.

காலத்தால் அழியாத காரியங்களைச் செய்வதில் வல்லவர் நீங்கள். இதுவரை, உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து, அடிப்படை வசதிகளையும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பையும் தந்தார் சனி பகவான். 26.09.2009 முதல் 21.12.2011 வரை, உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் நுழைந்து பலன் தரப் போகிறார் அவர்.

'7-வது வீட்டுக்கு சனி வருகிறாரே?' என்ற பதட்டம் வேண்டாம். எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். தம்பதிக்கு இடையே சிறு சிறு சந்தேகங்கள் தலை தூக்கலாம். பணம் வரும்; வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிக்கப் பாருங்கள். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தலை தூக்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

26.09.2009 முதல் 19.09.2010 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் செல்கிறார் சனி பகவான். இந்தக் காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல், நெஞ்சுவலி, வீண்பழி ஆகியன ஏற்படலாம். எனினும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்கிறார். இந்த நாட்களில் வழக்கில் வெற்றி, சித்தர்கள் தொடர்பு, வெளிநாட்டுப் பயணங்கள் வரக்கூடும்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில், 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் குழந்தை பாக்கியம், பண வரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வருங்காலத்தை அமைத்துத் தருவீர்கள். எனினும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வீண் அலைச்சல், சிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.

உங்களின் தன- பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில், 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் விருந்தினர் வருகையும் உண்டு. உடன் பிறந்தவர்கள் உதவுவர்.

சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் அதிகரித்தல், இரும்பு- சுண்ணாம்புச் சத்து குறைவு ஏற்படக்கூடும். மெடி-க்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். உதவியாக இருக்கும்.விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்; மறதியால் பொருட்களை இழக்க நேரிடும். வெளியூர் செல்வதற்கு முன் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனமாகச் செய்யுங்கள்! வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிலும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். எதிர்த்துப் பேசியவர்களும் நட்பு பாராட்டுவர். வி..பி-கள் தக்க நேரத்தில் உதவுவர். நெருங்கிய உறவினர் அல்லது நண்பரது இழப்பு வாட்டும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். லேசாக கால் வலி, உடல் அசதி, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி புதிய முதலீடுகள் வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களால் லாபம் உண்டாகும். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கமிஷன், கன்சல்டன்ஸி மற்றும் கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி நிறுவனங்களில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்வழியில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவியரே... கணிதம்- வேதியியல் பாடங்களில் அலட்சியம் வேண்டாம். விளையாட்டில் சாதிப்பீர்கள். உயர் கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். கலைஞர்கள், தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். மூத்த கலைஞர்கள் பாராட்டுவர்.

பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி, அலைச்சலையும் செலவையும் தந்தாலும், அனுபவ அறிவையும், செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.

No comments:

Post a Comment