Sunday, August 2, 2009

கிரெடிட் கார்டு பயன்படுத்துவர்களுக்கு எச்சரிக்கை!

துநாள் வரை கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் பல பொருட்களை நீங்கள் ஹாயாக வாங்கிக் குவித்திருக்கலாம். அதற்கு இப்போது ஒரு சின்னச் சிக்கல் வந்திருக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதம் முதல் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்கவேண்டுமெனில் புதிதாக வங்கியில் இருந்து ஒரு பாஸ்வேர்டு வாங்கவேண்டும். 'பாஸ்வேர்டு இல்லாவிட்டால், இனி எந்தப் பொருளையும் ஆன்லைனில் வாங்கமுடியாது' என்று ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

எதற்காக இந்த புதிய பாஸ்வேர்டு? இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா? அல்லது வங்கிகள் தங்கள் வசதிக்காக வாடிக்கையாளர்களை வதக்கி எடுக்கிறார்களா? என்ற சந்தேகங்கள் குறித்து -காமர்ஸ் துறையில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான, 'இந்தியா பிளாசா' நிறுவனத்தின் துணை ஸ்தாபகரான வைத்தீஸ்வரனிடம் கேட்டோம்.

''இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிரெடிட் கார்டு அறிமுகமானபோது மிகச் சில அடிப்படையான விதிகள் மட்டுமே இருந்தன. ஆனால், காலம் செல்லச் செல்ல கிரெடிட் கார்டை மையப்படுத்தி பலவிதமான குற்றங்கள் நடக்க ஆரம்பிக்க, அதற்கேற்றாற் போல் விதிகளையும் மாற்றினார்கள். அந்த வகையில்தான் தற்போது ஆன்லைனில் பொருட்களை வாங்கவேண்டுமெனில் புதிதாக ஒரு பாஸ்வேர்டை வங்கியில் பெறவேண்டும் என்றொரு விதியைக் கொண்டு வந்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

இப்போது வந்திருக்கும் உத்தரவினால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. சொல்லப் போனால் ஆன்லைன் மூலம் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் பொருட்களை வாங்கத்தான் இந்த விதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

முன்பு ஒரு பொருளை ஆன்லைனில் வாங்கும் போது, உங்கள் அக்கவுன்ட்டை யாராவது மடக்கி, அதில் உள்ள பணத்தை எல்லாம் அள்ளிக் கொண்டு போய்விடுவார்களோ என்ற பயம் வரும். இப்போது வந்திருக்கும் உத்தரவின்படி, நீங்கள் ஒரு பாஸ்வேர்டு வாங்கிவிட்டால் அந்த பயத்துக்கு விடை கொடுத்துவிடலாம்.

ஆன்லைனில் பொருட்களை வாங்குவது சௌகரியமானது. ஒருமுறை அந்த வசதியை அனுபவித்தவர்கள் அதை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்'' என்றார் வைத்தீஸ்வரன்.

''இப்போது வந்திருக்கும் உத்தரவினால் -காமர்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்களே?'' என்ற கேள்விக்கு,

''-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அந்த பாதிப்புகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இப்போது தெளிவாகச் சொல்லமுடியாது. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் சரியான நிலவரம் தெரியவரும்'' என்றார் அவர்.

வாடிக்கையாளர்கள் எந்த வங்கியில் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்களோ, அந்த வங்கியின் இணையதளத்துக்குச் சென்று பாஸ்வேர்டைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், 'கிரெடிட் கார்டு மூலம் நேரடியாகப் பொருட்களை வாங்கும்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் காட்டவேண்டும்' என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி யுள்ளது. காரணம், நாட்டில் ஐந்து கோடி கிரெடிட் கார்டுகளும், முப்பது கோடி டெபிட் கார்டுகளும் உள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் கிரெடிட் கார்டு மோசடிகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. கிரெடிட் கார்டு மூலமாக 2008 ஏப்ரல் முதல் டிசம்பருக்குள் 11 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தெரிகிறது.

-மெயில் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ .டி., பாஸ்வேர்டை யாரேனும் கேட்டால் பதிலளிப்பதைத் தவிர்த்துவிடவும். இது நமது பணத்துக்குக் கூடுதல் பாதுகாப்பாக அமையும். இன்றுவரை நீங்கள் புதிய பாஸ்வேர்டு வாங்கவில்லை என்றால் இனியாவது வாங்கிவிடுவது நல்லது.

No comments:

Post a Comment