Friday, July 17, 2009

பத்மஸ்ரீ விவேக்கின் மறுபக்கம்!

சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் அருகில் உள்ள பூண்டி புஸ்பம் கல்லுரி ஆண்டு விழாவிற்கு 'ஜனங்களின் நாயகன்' விவேக் வந்திருந்தார். அவரை நான் மற்றும் எனது நண்பர்கள் தனசேகர், சாய் சுதாகர் ஆகியோர் தஞ்சை ரயில் வே ஸ்டேஷனில் சந்தித்தோம்.

அப்பொழுது சாய் சுதாகர் ஒரு புத்தகத்தை அவருக்கு கொடுத்தான் அப்போது அவர் உங்களின் முகவரியை எழுதி கொடுங்கள் நான் புத்தகத்தை படித்து விட்டு கடிதம் போடுகிறேன் என்றார் இதுவரை எந்த தகவலும் இல்லை.

என் சார் நீங்க இன்னும் கமல் சார் படத்தில நடிகல? என்றேன்”

"என்னை ஒரு மாதிரி பார்த்து கோபமாக இந்த கேள்விய ஏன் என்கிட்ட கேட்குறிங்க போய் அவர்கிட்ட, ஏன் விவேக்க உங்க படத்தில நடிக வைக்க மாட்டேன்கிறேங்க கேட்க சொன்னார்”

நான் அவரை சமாதான படுத்தும் நோக்கில் கரெக்ட் சார் அவர் இதுவரை ரகுவரனை கூட அவர் படத்தில பயன்படுதிக்கவில்லை என்றேன். வேகமாக சென்ற விவேக்குட்” என்றார். மேலும் அவர் எங்களை போன்ற திறமையான நடிகர்களை பயன்படுதிக்க மாட்டார்!! என்றார்.

இந்த உலக மகா முக்கியமான விஷயத்தை நான் எதுக்கு சொல்லுறேன்னா மகா ஜனங்களே ஆடியோ ரிலீஸ், திரைப்பட வெற்றிவிழா போன்ற நிகழ்ச்சிகளின் பேசும் சில நடிகர்கள் அரசியல் வாதிகளை விட பல மடங்கு மோசமானவனுகோ! மைக் முன் ஒன்றும் மைக் இல்லாதப ஒன்றும் பேசும் கில்லாடிகோ!

இதை படிக்கும் அன்பர்கள் விவேக் E-Mail முகவரி தெரிந்தால் எனக்கு அனுப்பிவைக்கவும்!

3 comments:

  1. சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

    ReplyDelete
  2. இதெல்லாம் சகஜங்க!

    ReplyDelete
  3. இதுல என்னங்க மறுபக்கம் இருக்கு.. அவரும் நம்மளை மாதிரி சாதாரண மனிதர் தானே.. உங்கள் நண்பர் கொடுத்த புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதே மிக நல்ல விஷயம். சமயங்களில் நாம் காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களையே படிக்க நேரம் கிடைப்பதில்லை..

    பாவங்க அவரு...

    நல்லா எழுதுங்க.. தொடர்ந்து எழுதுங்க.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete